புதுடெல்லி

புதுடெல்லி: தனியார் நிலத்தில் உள்ள கோவில் தொடர்பான வழக்கில் ஆஞ்சநேயரையும் மனுதாரராக சேர்த்தவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.
புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியின் காரவால் நகர் பகுதியில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட 15 டன் போலியான மசாலாப் பொருள்களை டெல்லி காவல்துறை கைப்பற்றியுள்ளது. ஆலை உரிமையாளர்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லி, நொய்டா ஆகிய நகர்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளதால் அங்குள்ள பள்ளிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பள்ளிகளில் பாதுகாப்பு கருதி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி: டெல்லியில் தமிழ்நாட்டு விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் இரண்டாவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி: அயோத்தியில் இருந்து டெல்லிக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 13) புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்று, சண்டிகருக்கு மாற்றிவிடப்பட்டதைத் தொடர்ந்து, எரிபொருள் எஞ்சியிராத நிலையில் தரையிறங்கியதாக பயணி ஒருவர் கூறியுள்ளார்.